ட்ரெண்டிங்

நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியீடு! 

கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டோருக்கு நடைபெற்ற நீட் மறுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது தேசிய தேர்வு முகமை. https://neet.ntaonline.in/frontend/web/revised-scorecard/index என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று விண்ணப்பப் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு மாணவ, மாணவிகள் நீட் மறுத்தேர்வு முடிவுகளை அறிந்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கருணை மதிப்பெண்கள் வழங்கிய 1,563 பேருக்கு ஜூன் 23- ஆம் தேதி நீட் மறுத்தேர்வு நடைபெற்றது. சண்டிகர், சத்தீஸ்கர், குஜராத், ஹரியானா, மேகாலயாவில் நீட் மறுத்தேர்வு நடைபெற்றது. 1,563 பேரில் வெறும் 816 பேர் மட்டுமே நீட் மறுத்தேர்வை எழுதிய நிலையில், தற்போது முடிவுகள் வெளியாகின. 

நீட் மறுத்தேர்வுக்கு விண்ணப்பித்த 750 பேர் தேர்வெழுதவிலை என தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது. நீட் தேர்வில் பல்வேறு காரணங்களுக்காக கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதால் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், நீட் மறுத்தேர்வு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.