ட்ரெண்டிங்

சேலத்தில் Starbucks...வாடிக்கையாளர்களுக்கு காத்திருக்கும் இன்பதிர்ச்சி! 

அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் பிரபல காப்பி நிறுவனம் Starbucks. இந்த நிறுவனம் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான கிளைகளைக் கொண்டுள்ளது. காப்பி பிரியர்கள் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்து, உலகளவில் தற்போது ஸ்டார் நிறுவனத்திற்கான அந்தஸ்தைப் பெற்றுள்ளது. Starbucks என்றால் தெரியாதவர்களே இல்லை என்ற அளவிற்கு நிறுவனம் உருவெடுத்துள்ளது. 

தமிழகத்தில் சென்னை, கோவையைத் தொடர்ந்து, சேலம் மாவட்டத்திலும் Starbucks நிறுவனம் தனது கிளையைத் திறக்கவிருக்கிறது. சேலத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட Starbucks கடை ஜூன் 30- ம் தேதி முதல் சாரதா கல்லூரி சாலை, ஃபேர்லண்ட்ஸ் பகுதியில் உள்ள கிரீன் பார்க் (DNC) மாலில் திறக்கப்பட உள்ளது. கடைத் திறப்பை கொண்டாடும் வகையில், வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பு அறிமுக சேவையாக ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற சூப்பர் ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலத்தில் Starbucks நிறுவனத்தின் வருகையால் கல்லூரி மாணவர்கள், காதல் ஜோடிகள், இளம் தம்பதிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.