ட்ரெண்டிங்

பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக முன்னேறி இருக்கிறது. தொழில் நிறுவனங்கள் வருவதால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. இந்தியாவிலேயே 2ஆவது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. மோட்டார் வாகனங்கள், மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்தியில் முன்னணி மாநிலமாக இருக்கிறது. 

ஓசூர் நகரத்திற்கான பெருந்திட்டம் தயாரிக்கப்பட்டு அது நிறைவடையும் நிலையில் உள்ளது. ஓசூர் பொருளாதார வளர்ச்சி மையமாக உருவாக்க பல்வேறு கட்டமைப்புகள் செயல்படுத்தப்படுகின்றன. கிருஷ்ணகிரி, தருமபுரியில் ஒட்டுமொத்த சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில் திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்; 2,000 ஏக்கரில் ஆண்டுக்கு 3 கோடி பயணிகள் வந்து செல்லும் வகையில் விமான நிலையம் அமைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.