ட்ரெண்டிங்

வார விடுமுறை- சேலத்தில் 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் சார்பில், பண்டிகை நாட்களிலும், வார இறுதி நாட்களிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், இன்று (ஆகஸ்ட் 25) முதல் ஆகஸ்ட் 28- ஆம் தேதி வரை பயணிகளின் தேவைக்கு ஏற்ப சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சென்னை, பெங்களூரு, மதுரை, ஓசூர் ஆகிய நகரங்களுக்கு சுமார் 150 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

அதேபோல், சென்னையில் இருந்து சேலம், ஓசூர், நாமக்கல், தருமபுரி ஆகிய நகரங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வரும் ஆகஸ்ட் 30- ஆம் தேதி பௌர்ணமியையொட்டி, பக்தர்கள் திருவண்ணாமலைக்கு சென்று கிரிவலம் செல்வார்கள் என்பதால், ஆகஸ்ட் 29, 30 ஆகிய தேதிகளில் சேலம், ஆத்தூர், தருமபுரி உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.