விளையாட்டு

டி20 அரையிறுதி- இந்தியா- இங்கிலாந்து பலப்பரீட்சை! 

டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் அரையிறுதியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் மோதவுள்ள போட்டி கயானாவில் இன்று (ஜூன் 27) இரவு 08.00 மணிக்கு தொடங்கவுள்ளது. 

பலம் வாய்ந்த இரு அணிகளும் மோதவுள்ள போட்டி என்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்றைய போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் இந்தியா நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். 

இதனிடையே, ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணி இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி தென்னாப்பிரிக்கா அணியை எதிர்க்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.