ட்ரெண்டிங்

சாலையில் மயங்கிக் கிடந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த எம்.எல்.ஏ.! 

சேலம் மேற்கு தொகுதியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் அருள், இன்று (மார்ச் 02) மாலை தனது காரில் சேலம் வெண்ணங்கொடி முனியப்பன் கோயில் சாலையில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, சாலை விபத்தில் காரில் மயங்கிய நிலையில் இருந்த நபரைப் பார்த்த எம்.எல்.ஏ. அருள் உடனடியாக தனது காரை ஓட்டுநரிடம் நிறுத்த சொன்னார். 

பின்னர் காரில் இருந்து இறங்கிய எம்.எல்.ஏ., காரில் மயங்கிய நிலையில் இருந்த நபரை பொதுமக்கள், பா.ம.க. நிர்வாகிகளுடன் மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தார். பின்னர், வாடகை வாகனத்தை வரவழைத்த எம்.எல்.ஏ. அருள், அவரை ஏற்றிக் கொண்டு, தானும் அந்த வாகனத்தில் பயணித்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தார். 

மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், உயிரிழந்த நபர் சேலம் மாவட்டம், வாழப்பாடியைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் பாபு என்பது தெரிய வந்தது.