ட்ரெண்டிங்

கள்ளக்குறிச்சி புறப்பட்டார் நடிகர் விஜய்! 

விஷச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவிக்க தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய், கள்ளக்குறிச்சிக்கு புறப்பட்டுள்ளார். 

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தியதில் சுமார் 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 100- க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

விஷச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேரில் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். மேலும், மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருபவர்களையும் நேரில் உடல்நலன் விசாரித்து வருகின்றனர். 

அந்த வகையில், விஷச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவிக்க, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய், கார் மூலமாக சென்னையில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு புறப்பட்டுள்ளார்.