ட்ரெண்டிங்

சின்ன கோனூர் மாரியம்மன் கும்பாபிஷேக விழா! 

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே சின்ன கோனூரிலில் மாரியம்மன் கோயில் மஹா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. 

100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் கோயிலின் புனரமைப்பு பணிகள் முடிவந்ததை அடுத்து, மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டு மலர்தூவப்பட்டது. இதையடுத்து, தீயணைப்புத் துறையின் மூலம் பக்தர்களுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டது. 

ஆங்காங்கே பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. அதேபோல், கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.