ட்ரெண்டிங்

ஆட்சியமைக்க மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு! 

ஆட்சியமைக்க வருமாறு நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அழைப்பு விடுத்துள்ளார். 

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழு தலைவராக நரேந்திர மோடி தேர்வுச் செய்யப்பட்டிருந்தார். குடியரசுத் தலைவர் அழைப்பு விடுத்ததால் வரும் ஜூன் 09- ஆம் தேதி நாட்டின் பிரதமராக 3ஆவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கிறார். வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 06.00 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். 

ஜவஹர்லால் நேருவுக்கு பின் தொடர்ந்து 3ஆவது முறையாக பிரதமராகும் பெருமையை வரும் ஜூன் 09-ல் நரேந்திர மோடி பெறுகிறார். கடந்த 1962- ஆம் ஆண்டில் நேரு 3ஆவது முறையாக ஆட்சிக்கு வந்த நிலையில் அந்த சாதனையை மோடி சமன் செய்தார். 1947 முதல் 1964- ஆம் ஆண்டு வரை சுமார் 16 ஆண்டுகளுக்கு ஜவஹர்லால் நேரு பிரதமராகப் பதவி வகித்தார்.