ட்ரெண்டிங்

அரசு வேலை வாங்கித் தருவதாக பணமோசடி!

 

சேலம் மாவட்டம், கம்மாளப்பட்டியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கண்ணகி. இவர் சமூக ஆர்வலர் சிராஜுதீனுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று புகார் மனுவை அளித்துள்ளார்.

 

அந்த மனுவில், எனது மகன் பிரவீன் குமார், 10- ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றுள்ளார். எனது உறவினர் சேகர் என்பவர் மூலமாக பனமரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் எங்களுக்கு அறிமுகமானார். அப்போது அவர் எனது மகனுக்கு மின்வாரியத்தில் ஓட்டுநர் பணி வாங்கித தருவதாகக் கூறி ரூபாய் 8 லட்சம் என்னிடமிருந்து பெற்றார்.

 

பல மாதங்கள் ஆகியும் அரசு வேலை வாங்கி தரவில்லை. இதுகுறித்து அவரிடம் கேட்கும் பொழுது சரிவர பதில் அளிக்காததால் பணத்தை திருப்பி கேட்டபோது கொலை மிரட்டல் விடுகிறார். எனவே தன்னிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும், பணத்தை மீட்டுத் தர வலியுறுத்தியும், புகார் மனுவில் கோரியுள்ளார்.