ட்ரெண்டிங்

"பா.ஜ.க. கூட்டணி தான்"- சந்திரபாபு நாயுடு உறுதி! 

ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று முதலமைச்சராக பதவியேற்கவுள்ள நிலையில், விஜயவாடாவில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

அப்போது அவர் தெரிவித்ததாவது, தெலுங்கு தேசம் கட்சியை வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி. என் வாழ்நாளில் இதுபோன்ற வரலாற்று சிறப்பு மிக்க தேர்தலை நான் கண்டதில்லை. மக்களுக்கு சேவை செய்ய அதிகாரத்திற்கு வரும் போது பதவியைத் துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. மக்கள் நலனுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன். 

நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தான் இருக்கிறேன்; கூட்டணி கூட்டத்திற்கு செல்கிறேன். நாட்டில் பல்வேறு அரசியல் மாற்றங்களைப் பார்த்திருக்கிறேன்; நான் அனுபவமிக்கவன். பா.ஜ.க., ஜனசேனா கட்சிகள் இணைந்து பணியாற்றியதால் இந்த வெற்றி கிடைத்தது எனத் தெரிவித்துள்ளார்.