ட்ரெண்டிங்

தமிழகத்தில் கனமழையால் 11 பேர் உயிரிழப்பு! 

தமிழகத்தில் கனமழையால் 11 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக அரசின் பேரிடர் மேலாண்மைத்துறை தெரிவித்துள்ளது. 

இது குறித்து பேரிடர் மேலாண்மைத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் மே 16 முதல் மே 20 வரை பெய்த கனமழை காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளனர்; கடந்த 24 மணி நேரத்தில் 12 கால்நடைகள் இறந்துள்ளன; 24 குடிசைகள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளன. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாத் தளங்களுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். 

கடலூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் மின்னல் தாக்கியும், வெள்ளம் காரணமாகவும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். நெல்லை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 4.05 கோடி செல்போன்களுக்கு எச்சரிக்கை மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது. மாநில பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 296 வீரர்கள் அடங்கிய 10 குழுக்கள் தயார் நிலையில் உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.