ட்ரெண்டிங்

இந்தியா கூட்டணி ஆட்சியமைக்கும்- கார்கே நம்பிக்கை! 

மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சியமைக்கும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

டெல்லியில் உள்ள கார்கேவின் இல்லத்தில் இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், ராகுல் காந்தி, சோனியா காந்தி, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், டி.ஆர்.பாலு எம்.பி., டி.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். 

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, மக்களவைத் தேர்தலில் வென்று இந்திய கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி. இந்தியா கூட்டணி 295- க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றும். பா.ஜ.க. ஆட்சியமைப்பது சிரமம் என்று அரசு நிறுவனங்கள் கூட கணித்து கூறியுள்ளன. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் ஊடகங்கள் உண்மையை சொல்ல வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். 

ஆலோசனைக்கு பிறகு இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டாகப் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.