ட்ரெண்டிங்

இறுதிக் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை ஓய்ந்தது! 

மக்களவைத் தேர்தல்- 7வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடக்கும் தொகுதிகளில் பரப்புரை நிறைவுப் பெற்றது. 

உத்தரப்பிரதேசம், பீகார், ஒடிஷா உள்ளிட்ட 8 மாநிலங்களில் 57 தொகுதிகளில் அனல் பறக்கும் பிரச்சாரம் ஓய்ந்தது. இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 57 மக்களவைத் தொகுதிகளில் வரும் ஜூன் 01- ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி மக்களவைத் தொகுதிக்கும் வரும் ஜூன் 01- ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. நாடு முழுவதும் இதுவரை 486 தொகுதிகளுக்கு 6 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நிறைவடைந்துள்ளது. 

பதிவான வாக்குகள் அனைத்தும் வரும் ஜூன் 04- ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.