ட்ரெண்டிங்

கன்னியாகுமரி வந்தார் பிரதமர் மோடி! 

கன்னியாகுமரி வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி. 

கேரளாவின் திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு ஹெலிகாப்டரில் வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி. கன்னியாகுமரி விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுக்கும் பிரதமர், பின்னர் புகழ்பெற்ற பகவதி அம்மன் கோயிலுக்கு செல்கிறார். 

பகவதி அம்மன் கோயிலில் வழிபட்ட பின்னர் குமரி விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொள்கிறார். பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக படகில் விவேகானந்தர் திருமண மண்டபத்திற்கு பிரதமர் செல்லவுள்ளார். இன்று மாலை முதல் வரும் சனிக்கிழமை பிற்பகல் வரை தொடர் தியானத்தில் ஈடுபடவிருக்கிறார். 

பிரதமரின் வருகையையொட்டி, கன்னியாகுமரியில் கடல், வான் வழியே பலத்த பாதுகாப்புப் போடப்பட்டு கண்காணிப்புத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.