ட்ரெண்டிங்

வாக்குச்சாவடிகளில் அடையாளச் சான்றாக உபயோகப்படுத்தக் கூடிய ஆவணங்கள்! 

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19- ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வாக்குச்சாவடிகளில் அடையாளச் சான்றாக உபயோகப்படுத்தக் கூடிய ஆவணங்கள் எவை என்பது குறித்து இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அது குறித்து விரிவாகப் பார்ப்போம்! 

வாக்காளர் அடையாள அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை, மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சகத்தால் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் அட்டை, வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை, பாஸ்போர்ட், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்கள் பொதுத்துறை நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை, ஆதார் அட்டை, வங்கி, அஞ்சலகங்களால் புகைப்படத்துடன் வழங்கப்பட்ட கணக்குப் புத்தகங்கள், ஓட்டுநர் உரிமம், தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், பாராளுமன்ற/ சட்டமன்றப் பேரவை/ சட்டமன்ற மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அலுவலக அடையாள அட்டை, இந்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட இயலாமைக்கான தனித்துவமான அட்டை உள்ளிட்ட 13 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வாக்குச்சாவடிக்கு எடுத்துச் சென்று வாக்களிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.