ட்ரெண்டிங்

கைதாகி பிணையில் வெளிவந்த இருவர் மீது தாக்குதல்!

ஓமலூர் அருகே மோசடி வழக்கில் கைதாகி பிணையில் வெளிவந்த இரண்டு பேரை வழிமறித்த 8 பேர் அவர்களை சரமாரியாகத் தாக்கினர். 

ஓசூரைச் சேர்ந்த சங்கர் மற்றும் அருண் குமார் ஆகியோர் கிரிப்டோகரன்சி மூலம் 37 கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் கைதுச் செய்யப்பட்டு, பிணையில் வெளி வந்தனர். அவர்களைப் பின் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிலர், அந்த இரண்டு பேரையும் சரமாரியாகத் தாக்கிவிட்டு தப்பியோடினர். இந்த சம்பவம் ஓமலூர் அருகே உள்ள தீவட்டிப்பட்டியில் நடைபெற்ற நிலையில், தாக்குதல் குறித்து தீவட்டிப்பட்டிக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த சம்பவம் தீவட்டிப்பட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.