ட்ரெண்டிங்

பேரன் பிரஜ்வலுக்கு தேவகவுடா எச்சரிக்கை! 

பொறுமையை சோதிக்காமல் பிரஜ்வல் ரேவண்ணா நாடு திரும்ப வேண்டும் என்று அவரது தாத்தாவும், முன்னாள் பாரத பிரதமருமான தேவகவுடா கடிதம் எச்சரித்துள்ளார். 

இது குறித்து பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு முன்னாள் பிரதமர் தேவகவுடா எழுதிய கடிதத்தில், பொறுமையை சோதிக்காமல் பிரஜ்வல் ரேவண்ணா நாடு திரும்ப வேண்டும். எங்கிருந்தாலும் உடனே வந்து சட்டரீதியான விசாரணையை பிரஜ்வல் எதிர்கொள்ள வேண்டும். எனது எச்சரிக்கையை காதில் வாங்காவிடில் நான் உட்பட குடும்பத்தினர் கோவத்துக்கு பிரஜ்வல் ஆளாக வேண்டும். 

என் மீது கொஞ்சமாவது மதிப்பு இருந்தால் பிரஜ்வல் உடனே திரும்பி வர வேண்டும். பிரஜ்வல் மீதான விசாரணைக் குழுவின் விசாரணையில் என்னுடைய தலையீடு எதுவும் இருக்காது. சட்டத்துக்கு கீழ் பிரஜ்வல் படிய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். 

பாலியல் புகாரில் வழக்கில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணா, ஜெர்மனியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு, கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா இன்று இரண்டாவது முறையாகக் கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.