ட்ரெண்டிங்

வங்கக்கடலில் உருவாகவுள்ள புயலின் பெயர் REMAL!

வங்கக்கடலில் உருவாகவுள்ள தீவிரப் புயலுக்கு REMAL எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. வரும் மே 26- ஆம் தேதி மாலை வங்கதேசத்திற்கு அருகே புயல் கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியது. வடகிழக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக நாளை (மே 24) மாறும்; காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வடகிழக்கே நகர்ந்து புயலாக வலுப்பெறும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.