விளையாட்டு

வெளியேறியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி! 

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

அகமதாபாத்தில் நேற்றிரவு 07.30 மணிக்கு நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. பெங்களூரு அணியை வென்றதன் மூலம் ராஜஸ்தான் அணி குவாலிஃபயர் 2 போட்டியில் விளையாட தகுதிப் பெற்றது. 

முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ரன்களை எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன்களைக் குவித்து பெங்களூருவை வென்றது. 

நாளை (மே 24) சேப்பாக்கத்தில் நடைபெறும் 2-வது குவாலிஃபயர்  போட்டியில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.