ட்ரெண்டிங்

8 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரிப்பு! 

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. 

இது குறித்து தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறை இயக்குநர், தமிழகத்தில் உள்ள மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களுடன் கூடிய சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அதில், தமிழகத்தில் திருப்பூர், கோவை, மதுரை, தேனி, நாமக்கல், அரியலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. 

டெங்கு காய்ச்சலுக்கான வழிகாட்டுதல்களைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, தஞ்சை மாவட்டங்களில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.