ட்ரெண்டிங்

அதிக விலைக்கு மாடுகள் விற்பனை- விவசாயிகள் மகிழ்ச்சி! 

ஓமலூர் அருகே நடந்த மாட்டுச்சந்தையில் ரூபாய் 5 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது. 

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள பெருமாள்கோவில் கிராமத்தில் வெள்ளிக்கிழமைதோறும் மாட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். அதன்படி, நேற்று (மே 10) காலை மாட்டுச்சந்தை கூடியது. தேர்தல் நேரம் என்பதால் ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகளின் வரத்துக் குறைவாகவே இருந்தது. 

இருப்பினும், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் தேர்தல் நிறைவடைந்து விட்டதால் வியாபாரிகள் அதிகளவில் வந்திருந்தனர். கறவை பசு மாடுகள் ரூபாய் 42,000 முதல் 95,000 ரூபாய் வரைக்கும், கறவை எருமைகள் ரூபாய் 45,000 முதல் ரூபாய் 90,000 வரையிலும் விற்பனையானது. 

ஜோடி மாடுகள் ரூபாய் 1 லட்சம் வரை விற்பனையான நிலையில், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.