ட்ரெண்டிங்

பெரியார் பல்கலை. சார்பில் வாக்களிப்பது குறித்து பேரணி! 

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் வாக்களிப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. 

தேர்தலில் வாக்களிப்பது குறித்து உறுதிமொழி ஏற்ற மாணவ, மாணவிகள் ஓமலூர் பேருந்து நிலையத்தில் இருந்து பயணியர் மாளிகை வரை பேரணியாகச் சென்றனர். பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்ற அவர்கள், வாக்களிப்பது குறித்த வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகித்தனர்.