2023- 2024 ஆம் கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே 10- ஆம் தேதி வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் வரும் மே 10- ஆம் தேதி அன்று காலை 09.30 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படும். தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களுக்கு என்று மாணவர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியைக் குறிப்பிட்டு அறிந்துக் கொள்ளலாம்.
அனைத்து மைய நூலகங்களிலும், கிளை நூலகங்களிலும் கட்டணமின்றித் தேர்வு முடிவுகளை அறிந்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


