ட்ரெண்டிங்

பிரபல உணவகத்தில் வாங்கிய பிரியாணியில் கரப்பான் பூச்சி!

 

சேலம் மாவட்டம், ஐந்துரோட்டில் செயல்பட்டு வரும் பிரபல பிரியாணி கடையில் வாங்கிய உணவில் கரப்பான் பூச்சி இருந்ததால், வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார்.

 

குடும்பத்துடன், பிரபல பிரியாணிக்கு கடைக்கு சாப்பிட சென்ற மோகன்ராஜ், பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்தது குறித்து மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலருக்கு புகார் அளித்தார். கடைக்கு நேரில் வந்து ஆய்வுச் செய்த அதிகாரிகள், உணவுச் சமைக்கும் இடத்திற்கு அருகில் குப்பைத் தொட்டிகள் மூடாமல் இருந்ததால் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.