ட்ரெண்டிங்

மாணவர்கள் உயர்கல்வி படிக்க வேண்டும்- தலைமைச் செயலாளர் அறிவுறுத்தல்! 

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப. 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் உயர்கல்விக்கு வழிகாட்டும் 12- ஆம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவிகளுக்கான கல்லூரிக் கனவு- 2024 மாவட்ட அளவிலான நிகழ்ச்சியினை தொடங்கி வைத்து உரையாற்றினார். 

நிகழ்ச்சியில் பேசிய தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப., மாணவர்கள் வாய்ப்பைப் பயன்படுத்தி உயர்கல்வி படிக்க வேண்டும். மாணவர்கள் நன்றாகப் படித்து தமிழ்நாட்டிற்கு பெருமைத் தேடி தர வேண்டும். மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 1,000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டம் ஜூலையில் தொடங்கப்படும். தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் 4.5 லட்சம் மாணவர்கள் பயன்பெற உள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.