ட்ரெண்டிங்

தர்பூசணி, நுங்கு, இளநீர் விற்பனை அமோகம்! 

வெயில் கடுமையாக சுட்டெரித்து வரும் நிலையில், சேலம் மாவட்டத்தில் தர்பூசணி, நுங்கு, இளநீர் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. 

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் 100 பாரன்ஹீட்டைத் தாண்டி பதிவாகி வரும் நிலையில், பகல் நேரத்தில் சேலம் மாநகரில் உள்ள கடைவீதி சாலைகளில் ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இந்த சூழலில், சாலையோரங்களில் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக நுங்கு, தர்பூசணி, இளநீர் விற்பனை கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகிறது. 

தர்பூசணி, நுங்கு, இளநீர் ஆகியவை வழக்கத்தை விட கூடுதலாக விற்பனையாவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

இதனிடையே, கடுமையான வெயில் காரணமாக, வேலைக்கு செல்வோர், முதியவர்கள் என அனைவரும் கடும் அவதியடைந்துள்ளனர்.