ட்ரெண்டிங்

மும்முனை மின்சாரம் தடையின்றி வழங்கப்படுகிறது- அமைச்சர் விளக்கம்! 

விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் தடையின்றி வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார். 

இது குறித்து தமிழக நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்துள்ள விளக்கத்தில், விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் மட்டுமின்றி நுகர்வோர்களுக்கும் சீரான மின்சாரம் வழங்கப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளில் 1.5 லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு அளப்பரிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. 

கோடையில் மின்சார பயன்பாடும் அதிகரித்த வண்ணம் உள்ளது. டெல்டா மாவட்டங்களில் இரவில் விவசாய மின்சார இணைப்புகளின் பயன்பாடும் அதிகமாக இருக்கிறது. டெல்டாவில் ஏற்படும் இடையூறுகளை நிவர்த்திச் செய்ய தேவையான மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 3,200 மின்மாற்றிகள் நிறுவியதால் தாழ்வழுத்த மின்பாதையின் நீளம் குறைந்து மின்னிழப்பு குறைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.