ட்ரெண்டிங்

உழவர் சந்தை முன்பு தர்ணாவில் ஈடுபட்ட பா.ம.க. எம்.எல்.ஏ.!

 

சூரமங்கலம் உழவர் சந்தை முன்பு பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பா.ம.க.வின் சேலம் மாவட்டச் செயலாளரும், சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருப்பவர் அருள். இவர், இன்று (நவ 08) காலை 07.00 மணிக்கு சேலம் மாநகரின் ஜங்சன் ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ள சூரமங்கலம் உழவர் சந்தைக்கு வந்த எம்.எல்.ஏ. அருள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக விவசாயிகள், பா.ம.க.வினர் உள்ளிட்டோர் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

போராட்டம் குறித்து அருள் எம்.எல்.ஏ. கூறுகையில், "விவசாயி அல்லாதவர்களை சூரமங்கலம் உழவர் சந்தையில் கடை வைக்க மாவட்ட வேளாண்துறை துணை இயக்குநர் அனுமதி அளிக்கிறார். எனவே, அவரை உடனடியாகப் பணியிட மாற்றம் செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.