விளையாட்டு

சென்னை அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி அபாரம்! 

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி. 

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (மே 01) இரவு 07.30 மணிக்கு நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 162 ரன்களை எடுத்தது. அதைத் தொடர்ந்து விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 17.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. 

பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் பேர்ஸ்டோ 46, ரைலீ ரஸ்ஸோ 43, கேப்டன் சாம் கரண் 26, சஷாங் சிங் 25 ரன்களை எடுத்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 62, ரஹானே 29, ரிஸ்வி 21, மொயின் அலி 15 ரன்களை எடுத்தனர். 

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.