ட்ரெண்டிங்

தமிழகம், புதுச்சேரியில் வாக்குப்பதிவு நிறைவு! 

தமிழகம், புதுச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (ஏப்ரல் 19) காலை 07.00 மணிக்கு தொடங்கி மாலை 06.00 மணியுடன் நிறைவடைந்தது. மாலை 06.00 மணிக்கு முன்பு வரிசையில் நின்றவர்கள் டோக்கன்கள் பெற்று வாக்குகளை செலுத்துகின்றனர். 

அரசியல் கட்சியினரின் முகவர்கள் முன்னிலையில் வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் வாகனங்கள் மூலம் வாக்குகள் எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

பதிவான வாக்குகள் அனைத்தும் ஜூன் 04- ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.