ட்ரெண்டிங்

மாட்டுச்சந்தையில் ரூபாய் 5 கோடிக்கு மேல் வர்த்தகம்! 

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே இன்று கூடிய மாட்டுச்சந்தையில் சுமார் 5 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடைபெற்றது. வழக்கம் போல் கூடிய பெருமாள்கோயில் சந்தைக்கு விற்பனைக்காக வந்த கால்நடைகள், குறைந்தபட்சம் ரூபாய் 20,000 முதல் அதிகபட்சம் ரூபாய் 1,50,000 வரை விற்பனை செய்யப்பட்டது. 

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் ஆவணமின்றி கூடுதலாக பணம் கொண்டுச் செல்ல தடை இருந்தும் வெளிமாநில வியாபாரிகள் அதிகளவில் கால்நடைகளை வாங்கிச் சென்றனர். அதன்படி, சுமார் 5 கோடியே 50 லட்சம் ரூபாய் அளவிற்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் மகிழ்ச்சித் தெரிவித்துள்ளனர்.