ட்ரெண்டிங்

மாணாக்கர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு!

 

சேலம் மாவட்டம், நான்கு ரோட்டில் உள்ள சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் இன்று (டிச.16) காலை 10.00 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த 11- ஆம் வகுப்பு பயிலும் 1,232 மாணவர்கள், 1,410 மாணவிகள் என 2,642 மாணாக்கர்களுக்கு ரூபாய் 1.27 கோடி மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

 

இந்த நிகழ்ச்சியில், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேந்திரன், அருள், சதாசிவம் மற்றும் மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி, முன்னாள் அமைச்சர் டி.எம். செல்வகணபதி, பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், மாவட்ட கல்வி முதன்மை அலுவலர், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.