விளையாட்டு

சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருத்துராஜ் கெய்க்வாட் நியமனம்! 

17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நாளை (மார்ச் 22) மாலை 06.00 மணிக்கு கோலாகலமாக நடைபெறவுள்ளது. சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கண்கவர் இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், வாண வேடிக்கைகள் நடைபெறவுள்ளன. 

இந்த சூழலில், நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருத்துராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான கோப்பை அறிமுக நிகழ்ச்சியில் ருத்துராஜ் கெய்க்வாட் கலந்து கொண்டு புகைப்படங்களை எடுத்துக் கொண்டார்.

கடந்த 2008- ஆம் ஆண்டு முதல் சென்னை அணியின் கேப்டனாக தோனி இருந்து வரும் நிலையில் மாற்றப்பட்டுள்ளார். கடந்த 2021- ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரவீந்திர ஜடேஜா கேப்டனாக செயல்பட்ட நிலையில், பாதி தொடரில் மீண்டும் கேப்டன் ஆனார் தோனி என்பது குறிப்பிடத்தக்கது.