ட்ரெண்டிங்

மைசூரு- மானாமதுரை வாராந்திர இடையே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! 

மைசூரு- மானாமதுரை வாராந்திர இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், மைசூர்- மானாமதுரை இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது. அதன்படி, ஏப்ரல் 01- ஆம் தேதி முதல் மே 27- ஆம் தேதி வரை மைசூருவில் இருந்து மானாமதுரைக்கும், ஏப்ரல் 02- ஆம் தேதி முதல் மே 28- ஆம் தேதி வரை மானாமதுரையில் இருந்து மைசூருக்கும் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது. 

இந்த சிறப்பு ரயில்கள், திருப்பத்தூர், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும். இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவுத் தொடங்கியுள்ளது. இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.