ட்ரெண்டிங்

நாளை தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! 

தி.மு.க.வின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், நாளை (மார்ச் 20) காணொளி வாயிலாக நடைபெறும் என்று தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் அறிவித்துள்ளார். 

இது குறித்து தி.மு.க.வின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மார்ச் 20- ஆம் தேதி நண்பகல் 12.00 மணிக்கு தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்டச் செயலாளர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தல் பணிகள், தேர்தல் அறிக்கைகள், வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்டவைக் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசிக்கவுள்ளார்.