ட்ரெண்டிங்

நான்கரை வயது பெண் குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை! 

LKG பயிலும் நான்கரை வயது பெண் குழந்தைக்கு தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் பாலியல் வன்கொடுமை இழைக்கப்பட்டதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. 

கடந்த சனிக்கிழமை அன்று பள்ளியை முடித்து பள்ளி வாகனத்தில் வீடு திரும்பிய போது, குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக, குழந்தையை மருத்துவமனைக்கு அவரது பெற்றோர் அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர் குழந்தையின் உடல்நிலையைப் பரிசோதித்தனர். இதையடுத்து குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக மருத்துவர், பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். 

இது குறித்து குழந்தையின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, டி.எஸ்.பி. தலைமையிலான காவல்துறையினர், சம்மந்தப்பட்ட தனியார் பள்ளியில் விசாரணை நடத்தியதோடு, சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வுச் செய்து, பல்வேறு கோணங்களிலும் விசாரித்து வருகின்றனர்.