ட்ரெண்டிங்

ரயில் பயணிகளின் கனிவான கவனத்திற்கு! 


பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், விருத்தாசலம்- சேலம் ரயில் சேவைகள் மார்ச் மாதத்தில் நான்கு நாட்களுக்கு ரத்துச் செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆத்தூர்- சின்னசேலம் ரயில் நிலையங்களின் விருத்தாசலம்- சேலம் ரயில் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், மார்ச் 15, 21, 25, 29 ஆகிய தேதிகளில் விருத்தாசலம்- சேலம் ரயில் சேவைகள் இருமார்க்கத்திலும் ரத்துச் செய்யப்படுகிறது. 

எனவே, இதனை கருத்தில் கொண்டு பயணிகள் தங்களது பயணத்தைத் திட்டமிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.