ட்ரெண்டிங்

குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியானது!

குரூப் 1 முதன்மை எழுத்துத் தேர்வு முடிவுகளை இன்று (மார்ச் 07) வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி.

கடந்த 2023- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10- ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 13- ஆம் தேதி வரை துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்டப் பதவிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 முதன்மை எழுத்துத் தேர்வு நடந்தது. இந்த எழுத்துத் தேர்வை 1,333 ஆண்கள், 780 பெண்கள் என மொத்தம் 2,113 பேர் எழுதியிருந்தனர்.

இந்த நிலையில், குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகளை இன்று (மார்ச் 07) காலை 11.00 மணிக்கு வெளியிட்டது. இது குறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் குரூப் 1 முதன்மை எழுத்துத் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 

அத்துடன், எழுத்துத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கான வாய்மொழித் தேர்வு மார்ச் 26- ஆம் தேதி முதல் மார்ச் 28- ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.