ட்ரெண்டிங்

ஓட்டுநர் உரிமம் இனி பதிவு அஞ்சலில் மட்டுமே அனுப்பப்படும்!

 

இன்று (பிப்.28) முதல் ஓட்டுநர் உரிமங்கள், பதிவுச்சான்றுகள் பதிவு அஞ்சலில் மட்டுமே அனுப்பப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

 

 

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று (பிப்.28) முதல் ஓட்டுநர் உரிமங்கள், பதிவுச்சான்றுகள் பதிவு அஞ்சலில் மட்டுமே அனுப்பப்படும். எக்காரணம் கொண்டும் ஓட்டுநர் உரிமம் விண்ணப்பத்தாரருக்கு நேரடியாக வழங்கப்பட மாட்டாது. வாகன, சாரதி மென்பொருளில் அலைபேசி எண், முகவரி தவறாக தெரிவித்திருந்தாலும் விரைவு அஞ்சலில் அனுப்பப்படாது.

 

ஓட்டுநர் உரிமம் தபாலில் டெலிவரி செய்யப்படாமல் திரும்ப பெறப்பட்டாலும் நேரில் ஒப்படைக்கப்பட மாட்டாது. விண்ணப்பத்தாரரிடம் இருந்து உரிய ஸ்டாம்ப் ஒட்டப்பட்ட சுய முகவரியிட்ட தபால் பெறப்பட்டு அதில் அனுப்பப்படும். விண்ணப்பத்தாரர் ஓட்டுநர் உரிமம் பெற உண்மையான முகவரி, அலைபேசி எண்ணை மட்டுமே குறிப்பிட வேண்டும். ஓட்டுநர் பயிற்சிப்பள்ளி முகவரியைக் குறிப்பிட்டிருந்தால் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக முடக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.