ட்ரெண்டிங்

சிக்னல் கோளாறு காரணமாக நடுவழியில் நிறுத்தப்பட்ட விரைவு ரயில்கள்! 

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த மேல்பக்கம் ரயில் நிலையம் அருகே சிக்னல் கோளாறு காரணமாக, மைசூர் செல்லக் கூடிய சதாப்தி அதிவிரைவு ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, ரயில்வே ஊழியர்கள் சிக்னல் கோளாறை சரி செய்த பிறகு, மைசூர் சதாப்தி சிறப்பு ரயில் புறப்பட்டு சென்றது. 

அதன் பின்னர், சென்னை, கோவை, அரக்கோணம், வேலூர் உள்ளிட்ட ரயில்கள் ஒன்றன்பின் ஒன்றாக அரை மணி நேரம் காலதாமதமாகப் புறப்பட்டுச் சென்றது. இதன் காரணமாக பயணிகள் கடும் அவதியடைந்தனர். மேலும், மறுமார்க்கமாக வரும் ரயில்களும் தாமதமாக வந்தது.