விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி! 

ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி நிர்ணயித்த 192 ரன்கள் இலக்கை இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து கடந்தது. 

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் சர்மா 55, சுப்மன் கில் 52, துருவ் ஜுரேல் 39 ரன்களையும் சேர்த்தனர்.இளம் வீரர்கள் சுப்மன் கில், ஜுரேல் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் நெருக்கடியில் இருந்து மீண்டும் இந்திய அணி வெற்றி பெற்றது. 

முதல் இன்னிங்சில் ரூட் சதத்தின் உதவியுடன் இங்கிலாந்து அணி 353 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 307 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதால் இங்கிலாந்து 46 ரன்கள் முன்னிலை பெற்றது.