ட்ரெண்டிங்

பத்ம விருதுகள் 2024- சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு! 

பத்ம விருது- 2024 பெறுவதற்கு சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

இது குறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. தெரிவித்துள்ளதாவது, குடியரசுத் தினத்தன்று வழங்கப்படும் பன்முக திறமைக்கான விருதான பத்ம விருது- 2024 பெறுவதற்கு சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர்கள் (ஆண்/பெண்) விண்ணப்பிக்கலாம். 2024- ஆம் ஆண்டிற்கு கலை, இலக்கியம். கல்வி, விளையாட்டு மற்றும் மருத்துவத் துறைகளில் அளப்பறிய சாதனை புரிந்தவர்களுக்கு 26/01/2025- ஆம் நாளன்று கொண்டாடப்படும் குடியரசு தின விழாவில் மாநில அளவில் விருது வழங்கப்படவுள்ளது. மேற்படி விருதிற்கு பன்முக திறமை புரிந்த நபர்களிடமிருந்து கருத்துரு 21/07/2024- க்குள் https://padmaawards.gov.in என்ற இணையதள முகவரி மூலம் வரவேற்கப்படுகிறது. 

21/07/2024-க்குள் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர்கள் இணையதளத்தில் விண்ணப்பித்த விவரத்தினை மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம் அறை எண்.126, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், சேலம் மாவட்டம் என்ற முகவரியில் நேரில் தொடர்பு கொண்டு விவரம் தெரிந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.