ட்ரெண்டிங்

சட்டப்பேரவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு! 

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் அப்பாவு. 

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி 12- ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் தொடங்கியது. அப்போது, தமிழக அரசு தயாரித்து வழங்கிய உரையை முழுமையாக வாசிக்காமல் ஆளுநர் வெளியேறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

பிப்ரவரி 13, 14 ஆகிய தேதிகளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதங்கள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, பிப்ரவரி 19- ஆம் தேதி பொது பட்ஜெட்டும், பிப்ரவரி 20- ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், பட்ஜெட் மீதான விவாதத்திற்கு அமைச்சர்கள் பதிலளித்த நிலையில், இன்றுடன் சட்டப்பேரவையை சபாநாயகர் அப்பாவு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.