ட்ரெண்டிங்

பனைமர கள்ளுக்கடை இயங்கி வந்த குடிசைக்கு தீ வைத்த 3 பேர் கைது!

சேலம் மாவட்டம், ஓமலூருக்கு அருகே பனைமர கள்ளுக்கடை இயங்கி வந்த குடிசைக்கு அடையாளம் தெரியாத மர்மநபர்கள் தீ வைத்துச் சென்றனர். இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 

வடமனேரி பகுதியில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்வதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, பனைமர கள்ளுக்கடை குடிசைக்கு தீ வைத்து விட்டு தப்பிச் செல்ல முயன்ற மூன்று பேரை ஊர் பொதுமக்கள் விரட்டி பிடித்தனர். 

அப்போது பிடிப்பட்ட நபர்கள், பனைமர கல் விற்பனை செய்வதால், கஞ்சா விற்பனை குறைந்துள்ளது. எனவே, கள்ளுக்கடை குடிசைக்கு தீ வைத்தோம் என்று காவல்துறையினரிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர். பிடிப்பட்டவர்கள் மீது தீவட்டிப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.