ட்ரெண்டிங்

மருத்துவமனையில் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த துப்புரவுப் பணியாளர் கைது! 

 

தனியார் மருத்துவமனையில் பெண் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய மருத்துவனையின் ஊழியர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 


சேலம் மாவட்டம், இரண்டாவது அக்ரஹாரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தனது கணவரை அனுமதித்து, அங்கேயே தங்கியிருந்த வீராணம் பகுதியைச் சேர்ந்த பெண், மருத்துவமனையில் உள்ள குளியலறையில் குளித்துள்ளார். அப்போது, மருத்துவமனையில் பணியாற்றிய துப்புரவுப் பணியாளர் விவேகானந்தன், பெண் குளிப்பதை வீடியோவாக எடுத்து, அதனை சம்மந்தப்பட்ட பெண்ணிற்கே அனுப்பி மிரட்டியுள்ளார். 

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த தகவலையறிந்த விவேகானந்தன் தலைமறைவானதுடன், தான் பயன்படுத்திய சிம் கார்டை உடைத்துப் போட்டுள்ளார். 

இதையடுத்து, தீவிரமாக தேடி வந்த காவல்துறையினர், விவேகானந்தனின் செல்போனில் உள்ள ஐஎம்ஐஐ எண்ணை கொண்டு ட்ராக் செய்து, அவர் பதுங்கியிருந்த இடத்திற்கு சென்று அதிரடியாக கைது செய்தனர். அத்துடன், நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.