ட்ரெண்டிங்

பிரம்மாண்ட துணி பையை உருவாக்கி பள்ளி மாணவி சாதனை!

 

சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்தும், பிளாஸ்டிக் பைகளைத் தவிர்ப்பது குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 6,900 சதுர அடி பரப்பளவில் துணி பயை கையால் தைத்து தனியார் பள்ளி மாணவி கலாம் சாதனை படைத்துள்ளார்

 

சேலத்தில் தனியார் பள்ளியில் 7- ஆம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவி கௌசிகா, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது குறித்தும், பிளாஸ்டிக் பைகளைத் தவிர்ப்பது குறித்தும், பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 1,300 மீட்டர் நீளம் கொண்ட துணியைப் பயன்படுத்தி 6,900 சதுர அடியில் துணி பையை கைகளால் தைத்து கலாம் புக் ஆப் ரெக்கார்டு உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தியுள்ளார். 

 

"பிளாஸ்டிக் பைகளை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதுடன் காலநிலை மாற்றமும் அவ்வப்போது மாறி வருகிறது. குறிப்பாக சுற்றுலா தலம் மற்றும் மலைப்பகுதிகளில் இது போன்ற பிளாஸ்டிக் பைகளை பொதுமக்கள் பயன்படுத்துவதால் நீர்நிலைகள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் பைகளைத் தவிர்த்து பழைய முறைகளில் துணி பையை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக 6,900 சதுர அடியில் துணி பையை கைகளால் தைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினேன்" என்றார் மாணவி கௌசிகா.