ட்ரெண்டிங்

பெருமாள் கோயிலில் மூன்றாம் நாள் தேரோட்டம் கோலாகலம்!

 

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே பெருமாள் கோயிலில் மூன்றாவது நாள் தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

 

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள தொளசம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பெருமாள் கோயிலில் தை மற்றும் மாசி மாத விழா நடைபெற்று வருகிறது. விழாவின் மூன்றாவது நாளான நேற்று (பிப்.15) நடைபெற்ற தேரோட்டத்தில் 18 பட்டி கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

 

பெருமாள் கோயில் திருவிழா காரணமாக, தொளசம்பட்டி கிராமமே விழாக்கோலம் பூண்டுள்ளது. அதேபோல், பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.