ட்ரெண்டிங்

இந்த ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என அறிவிப்பு!

 

சேலம் வழியாக செல்லும் இரண்டு ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கோவை- திருப்பூர் ரயில் வழித்தடத்தில் ரயில் தண்டவாளங்களைப் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், வரும் பிப்ரவரி 13, 15, 17 ஆகிய தேதிகளில் ஆலப்புழா- தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் 13352), எர்ணாகுளம்- கேஎஸ்ஆர் பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் 12678) ஆகிய ரயில்கள் மேற்கண்ட நாட்களில் மாற்றுப் பாதையில் இயக்கப்படுகிறது. இதனால் கோவை ரயில் நிலையம் வழியாக செல்லாது; போத்தனூர் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் ரயில்கள் நின்றுச் செல்லும்.

 

எனவே, பயணிகள் இந்த அறிவிப்பைக் கொண்டு தங்கள் பயணங்களைத் திட்டமிடும் படியும் கேட்டுக் கொள்ளப்படுகிறது". இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.