ட்ரெண்டிங்

மக்கள் நீதிமன்றம் மூலம் 6,824 வழக்குகளுக்கு தீர்வு!

சேலம் மாவட்டம், அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றத்திலும், சங்ககிரி, மேட்டூர், ஆத்தூர், ஓமலூர் ஆகிய பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களிலும் நேற்று (செப்.09) மக்கள் நீதிமன்றம் நடந்தது. 

 

சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் நீதிபதி சுமதி தலைமையிலும், சார்பு நீதிபதி தங்கராஜ் ஒருங்கிணைப்பிலும் நடைபெற்றது. இதில், விபத்து, சிவில், காசோலை, குடும்ப நலம், உரிமையியல் உள்பட 19 அமர்வுகளில் 9,367 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

 

சுமார் 6,824 வழக்குகளுக்கு தீர்வுக் காணப்பட்டு, சுமார் 26.10 கோடி ரூபாய் சம்மந்தப்பட்டவர்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்டது. இதில் சாலை விபத்தில் உயிரிழந்த ஓட்டுநர் செந்தில்வேலின் மனைவி சுபாஷினிக்கு 20 லட்சம் ரூபாயும், இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் உயிரிழந்த கார்த்திகேயனின் மனைவி கீதாலட்சுமிக்கு 17 லட்சம் ரூபாயும் இழப்பீட்டிற்கான காசோலையாக வழங்கப்பட்டது.